பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு
குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும்
குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது.
குற்றத்தின் தன்மையைக்கேற்ப மரணத்
தண்டனை அளிக்கவும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 2013ல் இடமுள்ளது. கடந்த
மார்ச் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 21ஆம் தேதி மாநிலங்களவையிலும்
பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
இதையடுத்து, புதிய சட்டத்திற்கு குடியரசுத்
தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.