Saturday, 3 August 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் பணி அனுபவமாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவத்திற்கு அதிகபட்Œமாக 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்களுக்கு  கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதாவது, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணி புரிந்ததற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரை  பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும் நெட் அல்லது ஸ்லெட் தகுதியுடன் எம்.பில். முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் முதுநிலை பட்டப்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் என்ற கோவிந்த ராஜூலு. முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி பல இடங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. மிகவும் புனிதமான இந்த கொடியை வியாபார நோக்கில் காதல் சின்னமான இதய வடிவத்திலும், வானவில் போன்றும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இது சட்டப்படி தவறு. தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயலாகும்.வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்கப்படும் இத்தகைய செயலை தடை செய்யுமாறு கடந்த 16.11.2011 அன்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் கொடுத்தேன்.ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணா ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில்,தேசிய கொடியை வடிவம் மாற்றி விற்பனை செய்வது தவறு என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதியரசர் சதாசிவத்திற்கு நமது வாழ்த்துக்கள்


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி​யாகப் பொறுப்பெற்றுள்ளார் நீதியரசர் சதாசிவம். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை அடைவது இதுதான் முதல் முறை என்பதுதான் இந்த மகிழ்ச்சியோடு கலந்திருக்கும் அதிர்ச்சி.  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்துக்குச் சில தகுதிகள் எத்தனை தாமதமாகக் கிடைக்கின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து எத்தனையோ நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீதிபதி சதாசிவம் அந்தப் பழைய வரலாற்றை மாற்றிப் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.