உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பெற்றுள்ளார் நீதியரசர் சதாசிவம். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை அடைவது இதுதான் முதல் முறை என்பதுதான் இந்த மகிழ்ச்சியோடு கலந்திருக்கும் அதிர்ச்சி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்துக்குச் சில தகுதிகள் எத்தனை தாமதமாகக் கிடைக்கின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து எத்தனையோ நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீதிபதி சதாசிவம் அந்தப் பழைய வரலாற்றை மாற்றிப் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

No comments:
Post a Comment