உலக நாடுகள் அனைத்துமே பெருகி வரும் சுற்று சூழல் மாசை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், பெருநகரங் களில் அதிகமாக மாசு ஏற்பட்டு வருவதை தடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நமது மத்திய அரசு, வரும் 2019- ம் ஆண்டுக்குள் ‘பாரத் 5-ம் நிலை’ புகை கட்டுப்பாட்டு விதிகளை வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் அவகாசம் இருக்கும் நிலையில், டெல்லியை சேர்ந்த பச்சிளம் குழந்தைகள், மாசுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளனர்.