Tuesday, 7 May 2013

குறைபாடுள்ள கார் விற்பனை: டெல்கோ நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கியது


டெல்லியை சேர்ந்த சுபாஷ் அஹுஜா என்பவர், கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம், டாட்டா இண்டிகா கார் ஒன்றை நான்கு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே காரில் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கார் நிறுவனத்தின் உத்திரவாதக் காலம் முடிவதற்குள், நவம்பர் 2000-வது ஆண்டிற்குள், 36 தடவை காரில் ரிப்பேர் வேலைகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. உத்திரவாதக் காலம் முடிந்தபின்னரும், கார் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், நிறுவனம் வேறு என்ஜினும் மாற்றிக்கொடுத்துள்ளது. அப்போதும் வாடிக்கையாளரின் பிரச்சினை குறைந்தபாடில்லை.

Wednesday, 1 May 2013

குண்டர் சட்டத்தை கையாள்வதில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மாவட்ட ஆட்சிதலைவர் , காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு

குண்டர் தடுப்பு சட்ட உத்தரவில் கவனக்குறைவை காரணம் காட்டி நெல்லை பழைய கலெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியதுரை. அவர் காற்றாலை மின் பொருட்கள் திருடியதாக பழவூர் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பழவூர் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் பெரியதுரையை அப்போதைய கலெக்டர் செல்வராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2012ம் ஆண்டு ஏப்ரல் 26ல் உத்தரவிட்டார்.