Thursday, 4 October 2018

அவசர வழக்கு விசாரணை குறித்து தனி விதிமுறைகள் வகுக்கப்படும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 03 .10 .2018  அன்று   பதவி ஏற்றுக்கொண்டார்.  வடகிழக்கு மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, 3 October 2018

பத்திரப்பதிவு துறையில் ஆன் லைன் பதிவு

தமிழக அரசு பல்வேறு நல்ல முயற்சிகளை செய்து வருகிறது . தமிழகத்தில் 575 சார்-பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. பதிவுத்துறை இணையதளத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, வில்லங்க சான்றிதழ், முத்திரைத்தாள் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பெறலாம். ஆன்லைனிலே வில்லங்கச் சான்றிதழ்களையும் பெற முடியும்.அடுத்த கட்டமாக   பத்திரப் பதிவுகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் . இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.நாம் எந்த நேரத்திற்கு பத்திர பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது வரை நாம் முன்பே தெரிந்து கொள்ள இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

 https://tnreginet.gov.in/portal/என்ற இனைய தளம் மூலம் அரசு நமக்கு பல சேவைகளை அளிக்கிறது. அதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.