Saturday, 3 August 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் பணி அனுபவமாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவத்திற்கு அதிகபட்Œமாக 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்களுக்கு  கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதாவது, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணி புரிந்ததற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரை  பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும் நெட் அல்லது ஸ்லெட் தகுதியுடன் எம்.பில். முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் முதுநிலை பட்டப்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் என்ற கோவிந்த ராஜூலு. முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி பல இடங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. மிகவும் புனிதமான இந்த கொடியை வியாபார நோக்கில் காதல் சின்னமான இதய வடிவத்திலும், வானவில் போன்றும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இது சட்டப்படி தவறு. தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயலாகும்.வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்கப்படும் இத்தகைய செயலை தடை செய்யுமாறு கடந்த 16.11.2011 அன்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் கொடுத்தேன்.ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணா ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில்,தேசிய கொடியை வடிவம் மாற்றி விற்பனை செய்வது தவறு என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதியரசர் சதாசிவத்திற்கு நமது வாழ்த்துக்கள்


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி​யாகப் பொறுப்பெற்றுள்ளார் நீதியரசர் சதாசிவம். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை அடைவது இதுதான் முதல் முறை என்பதுதான் இந்த மகிழ்ச்சியோடு கலந்திருக்கும் அதிர்ச்சி.  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்துக்குச் சில தகுதிகள் எத்தனை தாமதமாகக் கிடைக்கின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து எத்தனையோ நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீதிபதி சதாசிவம் அந்தப் பழைய வரலாற்றை மாற்றிப் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். 

Tuesday, 7 May 2013

குறைபாடுள்ள கார் விற்பனை: டெல்கோ நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கியது


டெல்லியை சேர்ந்த சுபாஷ் அஹுஜா என்பவர், கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம், டாட்டா இண்டிகா கார் ஒன்றை நான்கு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே காரில் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கார் நிறுவனத்தின் உத்திரவாதக் காலம் முடிவதற்குள், நவம்பர் 2000-வது ஆண்டிற்குள், 36 தடவை காரில் ரிப்பேர் வேலைகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. உத்திரவாதக் காலம் முடிந்தபின்னரும், கார் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், நிறுவனம் வேறு என்ஜினும் மாற்றிக்கொடுத்துள்ளது. அப்போதும் வாடிக்கையாளரின் பிரச்சினை குறைந்தபாடில்லை.

Wednesday, 1 May 2013

குண்டர் சட்டத்தை கையாள்வதில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மாவட்ட ஆட்சிதலைவர் , காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு

குண்டர் தடுப்பு சட்ட உத்தரவில் கவனக்குறைவை காரணம் காட்டி நெல்லை பழைய கலெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியதுரை. அவர் காற்றாலை மின் பொருட்கள் திருடியதாக பழவூர் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பழவூர் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் பெரியதுரையை அப்போதைய கலெக்டர் செல்வராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2012ம் ஆண்டு ஏப்ரல் 26ல் உத்தரவிட்டார். 

Sunday, 14 April 2013

பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்


பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது.
குற்றத்தின் தன்மையைக்கேற்ப மரணத் தண்டனை அளிக்கவும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 2013ல் இடமுள்ளது. கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 21ஆம் தேதி மாநிலங்களவையிலும் பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
இதையடுத்து, புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.