Thursday, 4 October 2018

அவசர வழக்கு விசாரணை குறித்து தனி விதிமுறைகள் வகுக்கப்படும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 03 .10 .2018  அன்று   பதவி ஏற்றுக்கொண்டார்.  வடகிழக்கு மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Wednesday, 3 October 2018

பத்திரப்பதிவு துறையில் ஆன் லைன் பதிவு

தமிழக அரசு பல்வேறு நல்ல முயற்சிகளை செய்து வருகிறது . தமிழகத்தில் 575 சார்-பதிவாளர் அலுவலங்கள் உள்ளன. பதிவுத்துறை இணையதளத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, வில்லங்க சான்றிதழ், முத்திரைத்தாள் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பெறலாம். ஆன்லைனிலே வில்லங்கச் சான்றிதழ்களையும் பெற முடியும்.அடுத்த கட்டமாக   பத்திரப் பதிவுகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் . இதன் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம்.நாம் எந்த நேரத்திற்கு பத்திர பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்பது வரை நாம் முன்பே தெரிந்து கொள்ள இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

 https://tnreginet.gov.in/portal/என்ற இனைய தளம் மூலம் அரசு நமக்கு பல சேவைகளை அளிக்கிறது. அதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Sunday, 13 August 2017

இலவச சட்ட ஆலோசனை

நீங்கள் இலவச சட்ட ஆலோசனை பெற 8 .30 P M . முதல் 9 .௦௦ P.M. வரை 9843464246 என்ற என்னை தொடர்பு கொண்டு இலவச சட்ட ஆலோசனை பெறலாம்.   

Monday, 5 October 2015

பட்டாசு வேண்டாம் என்று பச்சிளம் குழந்தைகள்- உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உலக நாடுகள் அனைத்துமே  பெருகி வரும் சுற்று சூழல் மாசை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், பெருநகரங் களில் அதிகமாக மாசு ஏற்பட்டு வருவதை தடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நமது மத்திய அரசு, வரும் 2019- ம் ஆண்டுக்குள் ‘பாரத் 5-ம் நிலை’ புகை கட்டுப்பாட்டு விதிகளை வாகன உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் அவகாசம் இருக்கும் நிலையில், டெல்லியை சேர்ந்த பச்சிளம் குழந்தைகள், மாசுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளனர். 

Saturday, 3 August 2013

உதவிப் பேராசிரியர் நியமனம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் பணி அனுபவமாகக் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவத்திற்கு அதிகபட்Œமாக 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்கள் என மொத்தம் 34 மதிப்பெண்களுக்கு  கணக்கிடப்பட்டு ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். அதாவது, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணி புரிந்ததற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கல்வித் தகுதியைப் பொருத்தவரை  பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும் நெட் அல்லது ஸ்லெட் தகுதியுடன் எம்.பில். முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் முதுநிலை பட்டப்படிப்புடன் நெட் அல்லது ஸ்லெட் 5 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய கொடியை வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்றால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்தவர் கண்ணன் என்ற கோவிந்த ராஜூலு. முன்னாள் ராணுவ வீரரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தன்று தேசிய கொடி பல இடங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. மிகவும் புனிதமான இந்த கொடியை வியாபார நோக்கில் காதல் சின்னமான இதய வடிவத்திலும், வானவில் போன்றும் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இது சட்டப்படி தவறு. தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயலாகும்.வர்த்தக ரீதியாக வடிவத்தை மாற்றி தயாரித்து விற்கப்படும் இத்தகைய செயலை தடை செய்யுமாறு கடந்த 16.11.2011 அன்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் கொடுத்தேன்.ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணா ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில்,தேசிய கொடியை வடிவம் மாற்றி விற்பனை செய்வது தவறு என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதியரசர் சதாசிவத்திற்கு நமது வாழ்த்துக்கள்


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி​யாகப் பொறுப்பெற்றுள்ளார் நீதியரசர் சதாசிவம். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை அடைவது இதுதான் முதல் முறை என்பதுதான் இந்த மகிழ்ச்சியோடு கலந்திருக்கும் அதிர்ச்சி.  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 57 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழகத்துக்குச் சில தகுதிகள் எத்தனை தாமதமாகக் கிடைக்கின்றன என்பதற்கு இன்னுமோர் உதாரணம் இது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து எத்தனையோ நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீதிபதி சதாசிவம் அந்தப் பழைய வரலாற்றை மாற்றிப் புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். 

Tuesday, 7 May 2013

குறைபாடுள்ள கார் விற்பனை: டெல்கோ நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கியது


டெல்லியை சேர்ந்த சுபாஷ் அஹுஜா என்பவர், கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம், டாட்டா இண்டிகா கார் ஒன்றை நான்கு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே காரில் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கார் நிறுவனத்தின் உத்திரவாதக் காலம் முடிவதற்குள், நவம்பர் 2000-வது ஆண்டிற்குள், 36 தடவை காரில் ரிப்பேர் வேலைகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. உத்திரவாதக் காலம் முடிந்தபின்னரும், கார் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், நிறுவனம் வேறு என்ஜினும் மாற்றிக்கொடுத்துள்ளது. அப்போதும் வாடிக்கையாளரின் பிரச்சினை குறைந்தபாடில்லை.

Wednesday, 1 May 2013

குண்டர் சட்டத்தை கையாள்வதில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மாவட்ட ஆட்சிதலைவர் , காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பு

குண்டர் தடுப்பு சட்ட உத்தரவில் கவனக்குறைவை காரணம் காட்டி நெல்லை பழைய கலெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியதுரை. அவர் காற்றாலை மின் பொருட்கள் திருடியதாக பழவூர் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பழவூர் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்பேரில் பெரியதுரையை அப்போதைய கலெக்டர் செல்வராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2012ம் ஆண்டு ஏப்ரல் 26ல் உத்தரவிட்டார். 

Sunday, 14 April 2013

பாலியல் வன்கொடுமைக்கு ஆயுள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்


பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிசெய்கிறது.
குற்றத்தின் தன்மையைக்கேற்ப மரணத் தண்டனை அளிக்கவும் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 2013ல் இடமுள்ளது. கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 21ஆம் தேதி மாநிலங்களவையிலும் பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
இதையடுத்து, புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

Sunday, 29 July 2012

குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் உரிமைகள்


இந்திய ஜனநாயக அமைப்பில் குடியரசுத் தலைவர் என்பவர் முதல் குடிமகனாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் தான் அதிக அதிகாரம் கொண்டது. இருப்பினும் கூட முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கும் சில அதிகாரங்களை கொடுத்திருக்கிறது.

Monday, 23 July 2012

காவல் துறை கைது செய்து போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?



மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய திரு. திலிப் குமார் பாசு என்பவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் மேற்கு வங்க சட்டப்பணி சேவை மையம் என்ற அமைப்பை நிர்வகித்து வந்தார்.

Saturday, 21 July 2012

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்


1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.

Friday, 20 July 2012

எவையெல்லாம் சாலை விதிமீறல்கள்:



1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.

டி ரைவிங் லைசென்ஸ் பெறுவது எவ்வாறு



டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிகவும் சிம்பிளான வேலைதான். ஆனால், அதை எப்படி பெறுவது என்ற நடைமுறைகளை தெரிந்து கொண்டு சென்றால் நிச்சயம் மிக எளிதான விஷயமாகவே அமையும். டிரைவிங் லைசென்ஸ் பெறுவதை ஒரு பூதாகரமான விஷயமாக்கி ஏராளமான ஏமாற்று வித்தகர்கள் பணத்தை பறித்து விடுகின்றனர். இதனை தவிர்க்க சில வழிகாட்டு முறைகளை இங்கே வழங்குகிறோம்.

திருமணங்களை பதிவு செய்வது எப்படி


திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.


Wednesday, 18 July 2012

மனைவியால் கொடுமையா? கணவனு‌ம் விவாகரத்து பெறலா‌ம்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகத்தின் மகள் ஹேமலதாவு‌க்கு‌ம் ,கே.ரமேஷ் என்பவருக்கும்கட‌ந்த 2000ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 6ஆ‌ம் தே‌திதிருமணம் நடந்தது. வேளச்சேரியி‌ல் வ‌சி‌‌த்து வ‌ந்த இருவரு‌க்கு‌ம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடு‌த்து ரமேஷம்  அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகா‌‌ர் கொடு‌த்தா‌ர் ஹேமலதா 

தகவல் தராத நகராட்சிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது


ஓசூரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் அளிக்க மறுத்த நகராட்சி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு, 2,000 ரூபாய் இழப்பீடு வழங்க கிருஷ்ணகிரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஓசூர் நகராட்சியில் வாகன நிறுத்தும் இடங்களில் நகராட்சி நிர்ணயித்த கட்டணம் 5 ரூபாயை விட அதிகமாக, 7 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கூடுதலாக 2 ரூபாய் வசூலிக்கப்படுவது ஏன்? மற்றும் நடவடிக்கை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல் கோரி ஓசூர் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் அருணாச்சலம், தமிழக அரசின் நகராட்சியில் ஆவண தகவல் அலுவலரிடம் விவரங்களை கேட்டார்.

Tuesday, 10 July 2012

தொழிற் சங்கம் பதிவு செய்யும் நடைமுறைகள்


தொழிற்சங்கம் ஓன்று கட்டாயம் பதிவு செய்யப்பட  வேண்டும்  என்று  அவசியமில்லை. ஆனால் பதிவு செய்யப்பட்ட  தொழிற்சங்கங்களுக்கு, இச்சட்டத்தின் கீழ் சில சலுகைகளும் விளக்களிப்புகளும் வழங்கப்படுகின்றன. அவை பதிவு செய்யப்படாத தொழிர்சங்கங்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே நடைமுறையில் எல்லாத் தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
சங்கங்களின் பதிவாளர் நியமனம்
பிரிவு.3  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொழிற்சங்கங்களின் பதிவாரல் உரிய அரசால் நியமிக்கப்படுவார். அத்துடன் அப்பதிவாளரின் வழிகாட்டுதல், மற்றும் மேற்பார்வையின் கீழ்  ஒரு குறிப்பிட்ட , வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் பதிவாளரின் அதிகாரங்களையும் செயல்பாடுகளையும் 

49 ஒ’வை பயன்படுத்துவது எப்படி



வாக்காளர்கள் யாருக்காவது வாக்களித்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதையும் நாம் பதிவு செய்யலாம். உங்களுடைய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்குமே நீங்கள் வாக்களிக்க விரும்பா விட்டால் நீங்கள் அதை பதிவு செய்ய வாக்குசாவடிக்கு சென்றவுடன் வாக்குசாவடி அதிகாரியிடம் உங்கள் விருப்பத்தை சொல்ல வேண்டும்.வாக்களர்களின் பெயர்கள் கொண்ட பதிவேட்டில் உங்களது பெயரை பதிவு செய்வார் அந்த அதிகாரி , அந்த பதிவேட்டியிலையே உங்களது பெயருக்கு எதிராக ‘எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கின்றேன்’ என்றோ , அல்லது ‘எந்த வேட்பாளருக்கும் எனது வாக்கு இல்லை’ என்றோ நாம் எழுதினாலே போதும்.உங்கள் ஒட்டு பதிவாகி விடும். அதில் 49  ஒ’விற்கு  ஓட்டளித்தவர்கள் தனியாக அறிவிக்கப்படுவார்கள்.